ஏறக்குறைய வாழ்க்கை
தண்ணீரை யுடைத்து
சில்லுகள் தெறிக்க
துள்ளுகின்றன மீன்கள்.
அடியாழத்தில் விரித்த வலையின் சுவடுகள்
மேற்ப்பரப்பில் நீண்ட அலகுடன்
காத்திருக்கும் கொக்குகள்
வலைக்குச் சற்றுமேலும்
கொத்தும் அலகிற்குச் சற்றுகீழும
சுதந்திரமாகத்துள்ளித் திரிகின்றன தண்ணீரில் மீன்கள்
2 comments:
நல்ல கவிதை.. வாழ்த்துகள்
உங்கள் வாழ்த்துக்கு நன்றி உழவன்
Post a Comment