Tuesday, October 12, 2010

உயிர்மையில் வெளியான கவிதை 2




ஒரு இடம் காலியாயிருக்கிறது


யாருமற்ற வீட்டில்


விழுந்து புரள்கிறது

செய்தியை வாசிக்கச் சொல்லி

ஒரு கடிதம்





யாருமற்ற தெருவில்

கிடந்து மின்னுகிறது

மர்ம அறையைத் திறக்கச்சொல்லி

ஒரு கள்ளச்சாவி





யாருமற்ற அறையில்

மன்றாடுகிறது

மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி

ஒரு தேநீர்க்குவனள

.



யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்

புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது

மெல்லிய தாழை மணம்



யாருமற்ற வெளியில்

எல்லோருக்கும்

ஒரு இடம் காலியாயிருக்கிறது

No comments: