Friday, April 26, 2013

அறைநகரும் பாடல்கள்









அறைநகரும் பாடல்கள்


தாளிடும் சத்தம்
உடை கலைந்தநிர்வாண அமைதி
அயர்ச்சி
ஆசுவாசிக்கும் சிறு முச்சு
தொடங்கும் நீராடல்

நனைய துவங்குகையில்
சில்லிடும் சிலிர்ப்பு
சிறு நடுக்கத்துடன்
மெலிதான படலொன்றைத்தொடங்கும்.

கதவடியில் தெறிக்கும்
நீர்த்திவளைகளின் சங்கீதம்

நனைந்தபாடல் கரைந்து வழியும்
நீர்வரிகள் வழிந்தோடி சலசலக்கும்

நாசி நீளும் சந்திரிகை
நறுமணத்தோடு மெல்லக்கதவு திறந்து
கூந்தல் நுனிநீர்  சொட்டச்சொட்ட
நனைந்த மஞ்சள் பாதங்களிரண்டு
குளியலறைப் பாடலை
இன்னொரு அறைக்குநகர்த்தும்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// நனைந்தபாடல் கரைந்து வழியும்
நீர்வரிகள் வழிந்தோடி சலசலக்கும் ///

ரசித்தேன்... தொடர வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...