Wednesday, April 24, 2013







மழை கவிதைகள் 

மழை 1 

நெடு நாட்களுக்குப்பிறகு 
பெய்கிறதுமழை 
விழுந்தத்துளிகள் 
இலைகளை 
முழுவதுமாய் தழுவிப்பேசி 
பிரியமனமில்லாது 
இலைநுனிகளின் வாசலில்
இன்னுமிருக்கிறது
சொட்டாது.

மழை 2

ஒவ்வொரு படியாக
குதித்துக்குதித்து இறங்குகிறது
தளிர் மழை
பார்த்துப் பார்த்து எனத்
தவிக்கிறது
தாய் மழை

மழை 3

மழை அனுப்பிவைத்ததை
நனைந்துபெற்றுக்கொண்டேன்

மழை 4

ஒரே மழைதான்
வெவ்வேறு துளிகளில்
நனைகின்றோம் நாம்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நனைந்தேன்...

மிகவும் பிடித்தது 3

தொடர வாழ்த்துக்கள்....