Friday, April 12, 2013







கைக்குழந்தையுடன் 
பூங்காவைக் கடக்கிறாள்
ஒருத்தி. 
இளம் பிராயத்தில் 
யாரும் அறியாது 
காதலன் 
பறித்துக்கொடுக்கிற
மலர் செடியில்
இன்றும் அதே மலர்
பூத்திருப்பதைக் காண்கிறாள்!
மினுங்கும் கண்களோடும்
கனத்த இதயத்தோடும்
திடீரென்று
பாப்பாவிற்கு
ஒரு முத்தத்தை இடுகிறாள்.
உறக்கதிலிருக்கிற பாப்பா
விருட்டென்று விழித்துக்கொள்கிறது!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

புரிகிறது...

கஷ்டம் தான்...