Thursday, September 15, 2011

சிறு சிறு கவிதைகள்






.சிறகுகள் உதிர்ந்த ஈசல்கள்
மறுபடியும்
புழு பருவத்தை எய்தி
மறிக்கின்றன.



.ஒரு பூவை ரசித்து கொண்டிருக்கும் போது
சிலபட்டாம் பூச்சிகள்

 நம்மை கடந்து போய் விடுகின்றன.


.கனவென்பது 
நினைவுப்புகைப்படங்களைக்கழுவி
இரவில் காண்பது.





.அவிழ்க்க தெரிந்தகைகளுக்கு 
ஆராதிக்கத் தெரிவதில்லை.

No comments: