Wednesday, September 14, 2011

காலி பாட்டில் தளம்








காலி பாட்டில் தளத்திலிருந்து
புறப்படுகிறது ராக்கெட்

வீர்ரென்று உறுமும் வண்டின் சத்தம் ...
கருத்த இருளில்
ஒற்றைச்சுடர்
மேல் எழும்பி அந்தரத்தில்
பல வண்ணப்பூச்சரங்களை
தூவி மறைகின்றது

மனைவியும் ,மகளும்
அண்ணாந்து ரசிக்க
அவர்களது விழிகளில்
மின்னி மின்னி மறைகின்றன
குதூகல மின்னல்கள் .

யாருமற்ற வீட்டில்
சுதந்திர தின சிறப்பு கொண்டாட்டத்தில்
நிரம்பியிருந்த அதே பாட்டில் மதுவை
அருந்திப்புறப் பட்டு
பூமியையும்,வானத்தையும்
பறந்து அளந்த
  தினத்தைநினைந்து
 குறு நகை புரிகின்றான் கணவன்.

No comments: