அதைப் போலொரு
பறவையைப் பலியிட்டு
படையலுடன்
பிரார்த்தனனகளுடன்
அண்ணாந்து வானம் நோக்கி
அழைத்த படியிருந்தான்.
குறித்த நேரத்தில்
அவ்விடத்தைத்தினம்
வந்தடைகிற அது
அன்று வரவே இல்லை.
ஆளற்ற வானந்தரத்தில்
நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த
அவனை போலொரு
அழுகிய ஒன்றை
கொத்தி தின்று கொண்டிருந்தது அது .
No comments:
Post a Comment