Tuesday, August 16, 2011

காகிதத்தின் மீதுகடல்






சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதில்
ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்கவிடுகிறாள்
ஏழு மேகங்கலிருந்து
சில மழை துளிகளை உதிர விடுகிறாள்

மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில்
தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல்  ஏழு மலைளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நமக்கு

5 comments:

க.பாலாசி said...

அருமையா இருக்குங்க ரவி..

rajamelaiyur said...

அருமையான கவிதை

rajamelaiyur said...

கலக்கல் கவிதை

rajamelaiyur said...

தமிழ்மணம் முதல் வோட்

ரவிஉதயன் said...

நன்றி பாலா ,நன்றிராஜா