Thursday, February 17, 2011

முற்றுபுள்ளியால் கூட



நகங்களைப் போலவே
வளருகின்றன


சில சந்திப்புகள்,
சில பழக்கங்கள்,
சில வழக்கங்கள்,
சில இயலாமைகள்,
சில நிர்பந்தங்கள்,
சில கள்ளத்தனங்கள்,
சில துரோகங்கள்,

நேற்றோடுமுடித்துக்கொள்ளலாமென்று
இருந்த ஒன்று

புதிதாய் இன்னொன்றைதொடங்கிவைக்கிறது இன்று.

( முற்றுபுள்ளியால் கூடமுடிவதில்லை
எதையும் நிறுத்த-நகுலனின் கவிதை வரிகள்)   

No comments: