எனக்கு தெரியவில்லை.
காத்திருப்போர் பட்டியலிருந்து
வரிசைக்கிரமத்தில் காலியான படுக்கைவசதிக்கு
என் பெயர் வந்ததும்
கையசைத்து வழியனுப்ப
ஒருவரும் அருகில் இல்லாதிருந்ததும்
துயிலும் படுக்கைவசதி
சவப் பெட்டியாகியிருந்ததும்
பயணமற்ற பயணத்திற்க்கு
மரண ஜங்ஷனிலிருந்து பச்சைக் கொடியசைத்து
விடைகொடுத்து அனுப்பிவைத்தவர் கடவுளென்பதும்
எனக்குத் தெரியவில்லை
ஏனெனில்
நான் இறந்து போயிருந்தேன்.
பாரத்பாரதி அழைப்பின் பேரில் எழுதியது
No comments:
Post a Comment