யாருமற்ற வீட்டில்
விழுந்து புரள்கிறது
செய்தியை வாசிக்கச் சொல்லி
ஒரு கடிதம்
யாருமற்ற தெருவில்
கிடந்து மின்னுகிறது
மர்ம அறையைத் திறக்கச்சொல்லி
ஒரு கள்ளச்சாவி
யாருமற்ற அறையில்
மன்றாடுகிறது
மதுக்கோப்பையாய் மாற்றச்சொல்லி
ஒரு தேநீர்க்குவனள
.
யாருமற்ற நள்ளிரவு பேரமைதியில்
புணரச்சொல்லி கிளர்வூட்டுகிறது
மெல்லிய தாழை மணம்
யாருமற்ற வெளியில்
எல்லோருக்கும்
ஒரு இடம் காலியாயிருக்கிறது
உயிர்மையில்வெளியான கவிதை
No comments:
Post a Comment