Wednesday, December 11, 2013

பூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா










பூவின் இதழ்களை
பட்டாம் பூச்சியின் சிறகுகள் போல
வரைந்திருந்தாள்.

பட்டாம் பூச்சியின் சிறகுகளை
பூவின் இதழ்களைப் போல்
வரைந்து முடித்து விட்டு
சிறு கடவுளாகி சிரிக்கிறாள் நேஹா.

இப்பொழுது நான் காண்கிறேன்!

பட்டாம் பூச்சியின் சிறகுகள்
விரிய பூ மலர்வதையும்!

பூவின் இதழ்களோடு
பட்டாம் பூச்சி பறப்பதையும்!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனது பறக்கிறது... பாராட்டுக்க்கள்..

வாழ்த்துக்கள்..

”தளிர் சுரேஷ்” said...

குழந்தைகள் உலகம் எப்போதும் அழகானது! அருமை! நன்றி!

ரவிஉதயன் said...

நன்றி தனபால் சார்

ரவிஉதயன் said...

நன்றி சுரேஷ் சார்

ஜெயசரஸ்வதி.தி said...

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

அழகான வர்ணனை ...!!!


தொடர வாழ்த்துக்கள் ...!!!

ரவிஉதயன் said...

நன்றி தோழி