ரவிஉதயன்
Friday, December 28, 2012
அரிந்தமீனுக்குள்
பார்த்தேன்
ஒரு கடலின்
சீற்றத்தையும்
ஒரு குளத்தின்
மௌனத்தையும்
Thursday, December 27, 2012
அவிழ்த்து மேய்த்த
மந்தைகளை
இழுத்து வருகிறது
இடையனின் புல்லாங்குழலிசை.
Tuesday, December 25, 2012
இந்த வாரம் குங்குமம் வர இதழில் எனது கவிதைகள்
Thursday, December 20, 2012
அவரவர் ப்ரியம்
நீராடி நீந்துவதும்
இறைத்துக் குளிப்பதும்
அவரவர் ப்ரியம்
அதன் பாட்டுக்கு
ஓடுகிறது நதி.
Monday, December 17, 2012
மழை
ஒவ்வொரு படியாக
குதித்துக்குதித்து இறங்குகிறது
தளிர்மழை
பார்த்து, பார்த்து என
தவிக்கிறது
தாய் மழை
Saturday, December 15, 2012
புழுநகர்கிறது
புழுநகர்கிறது
பசியஇலையின்
பேரமைதிமீது.
உடலைச்சுருக்கி
உந்தியுந்தி செல்கிறது
மூடிய இமைகளுக்குள்
உருளும்துறவியின்
விழிகளைப்போல.
Thursday, December 13, 2012
மண் பறவை
மண் பறவை
கைநழுவி
உடைந்து விட்டது.
தரையில்
அதன் சிறகுகள்
தழுவிக் கொண்டது தாய் மண்ணை.
Saturday, December 8, 2012
பிரிகின்றன மேலும்
வழியனுப்ப வந்தவள்
விடை பெறுகிறாள்
அழுதவாறு.
விடைபெற்றுக்கொண்டவன்
வழியனுப்புகிறான்
கண்ணீரோடு.
ஒருவழி
நீள்த்தண்டவாளங்களாகவும்
இன்னொருவழி
தார்ச்சாலைககளாகவும்
பிரிகின்றன மேலும்
நனைகின்றன மழைநீரி
Sunday, December 2, 2012
இரு தலையணைகள்
நாம்
தலைசாய்த்த
தலையணைகள்
உறங்குகின்றன
ஒன்றின் மீது ஒன்று
தலை சாய்த்து.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)